இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ரா கரையோரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
எனினும், இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.