வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் தற்போது மின் தடை அமுலில் உள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தை மாற்றியமைப்பதற்கான வேலைகளுக்காகவே இன்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மின் துண்டிக்கப்பட்டதால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள் முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பு உடனடியாக மீள வழங்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.