BREAKING NEWS

நாட்டின் பல பகுதிகளில் சூரியன் உச்சிக்கு வரும் அதிசயம்.

DH
dhusanthi dhusi in முக்கிய செய்திகள்
Report
நாட்டின் பல பகுதிகளில் சூரியன் உச்சிக்கு வரும் அதிசயம்.

சூரியனின் வருடாந்த வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று (ஏப்ரல் 11) நண்பகல் 12:11க்கு பொம்பரிப்பு, அனுராதபுரம், மிஹிந்தலே, கலென்பிந்துனுவேவ, அக்போபுரம் மற்றும் செருனுவர போன்ற பகுதிகளில் சூரியன் சரியாக உச்சிக்கு வரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே பயணிக்கிறது. இதன் ஒரு பகுதியாக இன்று நண்பகல் 12:11 அளவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சூரியன் சரியாக உச்சிக்கு வரும். அப்போது தரையில் விழும் நிழல்கள் மிகக் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ காணப்படும் (Zero Shadow Day).

சூரியனின் இந்த வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இந்த நிலையை அவதானிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் நண்பகல் வேளையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் போதிய நீர் அருந்துமாறும் வெயிலில் அதிகநேரம் இருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.