இதனால் கரையோர மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 19 முதல் நிறுத்தப்பட்டிருந்த பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (23) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கண்டியிலிருந்து பொல்கஹவெலவிற்கும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இரண்டு ரயில்கள் இன்றையதினம் காலை சேவையில் ஈடுபட்டதாக புகையிரத திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.