மதுகம பொலிஸ் நிலையத்தில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களுடன் ஒரு மெகசின் காணாமல் போன விவகாரம் குறித்து பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவணச் சரிபார்ப்பின் போது, ஜனவரி 26 ஆம் திகதி முதல் தொடர்புடைய ஆயுதம் மற்றும் தோட்டாக்கள் காணாமல் போனது தெரியவந்தது.
காணாமல் போனது மதுகம பொலிஸ் துணைப் படையினரின் காவலில் இருந்த ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் அடங்கிய ஒரு மெகசின் ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.