அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டின் சில்வர் டெவல் அவுஸ்திரேலிய தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில், இலங்கை வீரர் பிரதீப் சோமசிறி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
சிட்னி பார்க் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெரா (Para) T46 பிரிவின் கீழ் பிரதீப் சோமசிறி பங்கேற்றார்.
போட்டி: 1500 மீற்றர் ஓட்டப்போட்டி.
வெற்றி: சர்வதேச வீரர்களுக்கு கடும் சவாலாக விளங்கிய பிரதீப், மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.
சர்வதேச அரங்கில் இலங்கை தேசியக் கொடியை ஏந்தச் செய்த பிரதீப் சோமசிறிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.