ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், இன்று ஏவுகணைத் தாக்குதலை கத்தார் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
ஏவுகணைத் தாக்குதலுக்கு நாடு உள்ளாகியுள்ளதாகவும், உள்வரும் ஏவுகணைகளுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் பதிலளித்து வருவதாகவும் அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து வளைகுடா முழுவதும் ஈரான் ஒரு பரந்த பதிலடி நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, ஈரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் அலைகளால் தோஹா நகர் குறிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தோஹா நகரின் அடிவானத்தில் புகை எழுவதைக் காண முடிந்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தோஹா முழுவதும் உரத்த குண்டுவெடிப்புகள் எதிரொலித்ததாலும், நகரத்தின் மீது புகை காணப்பட்டதாலும், வரவிருக்கும் ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்க அதன் இராணுவம் செயல்பட்டு வருவதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
“கட்டார் அரசாங்கம் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “ஏவுகணை தாக்குதலை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறிக்கின்றன” என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் “அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு அதிகாரிகளால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், வதந்திகளைத் தவிர்க்கவும்” அமைச்சு வலியுறுத்தியது.