ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவிலுள்ள கன்கரியா என்ற பகுதியில் மிகப்பெரிய தங்கச் சுரங்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கன்கரியா சுரங்கத்தில் சுமார் 3KM நீளத்திற்கு, 110 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தாதுக்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 222 டன் தூய தங்கம் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ராஜஸ்தானில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கங்களில் இதுவே அதிக தங்க இருப்பு கொண்ட சுரங்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக பன்ஸ்வாரா மாவட்டத்திலுள்ள ஜக்புரா மற்றும் புகியா ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.