சூரியனின் தற்காலிக வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக, இலங்கையின் சில பகுதிகளில் இன்று (ஏப்ரல் 06) சூரியன் நேர் உச்சியில் காணப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நண்பகல் சுமார் 12:13 க்கு சூரியன் சரியாகத் தலைக்கு மேல் உச்சியில் இருக்கும்.
பேருவளை, குருலுபெத்த, ரக்வானை, கொடகவெல, உடவலவை மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளில் இன்று இந்த அபூர்வ நிகழ்வு பதிவாகவுள்ளது.
ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் எனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெப்பம் மற்றும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் நண்பகல் வேளையில் வெளியில் செல்வதைத் தவிர்த்து, போதிய அளவு நீர் அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.