BREAKING NEWS

இலங்கையின் 8 நகரங்களில் சூரியன் உச்சி.

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
இலங்கையின் 8 நகரங்களில் சூரியன் உச்சி.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, இலங்கையின் சில பகுதிகளுக்கு மேலாக இன்று (ஏப்ரல் 07) சூரியன் செங்குத்தாக (Directly Overhead) உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று மதியம் 12:13 க்கு தெஹிவளை,மஹரகம,பன்னிபிட்டிய,பாதுக்க,எஹலியகொட,மஸ்கெலியா,சியம்பலாண்டுவ,பொத்துவில் போன்ற நகரங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும்.

இந்தச் சூரிய உச்சத்தின் போது, நண்பகல் வேளையில் நிழல்கள் மிகக் குறைவாகத் தெரிவதுடன், பகல் நேர வெப்பநிலையும் வழக்கத்தை விடக் கூடுதலாகக் காணப்படும். ஏப்ரல் 15 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மேலாக சூரியன் இவ்வாறு பயணிக்க உள்ளதால், மக்கள் பகல் நேரங்களில் அதிக வெயிலைத் தவிர்ப்பது சிறந்தது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.