அநுராதபுரம், தலாவ பகுதியிலுள்ள ஜயகங்க சந்திக்கு அருகில், பாடசாலை மாணவர்கள் அடங்கிய குழுவினர் பயணித்த பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக ஆதிகரித்துள்ளது. உயிரிழந்நவர்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விபத்தில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் தலாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.