கொழும்பு துறைமுகம் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுமார் 32.2 பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இது, 71 சதவீத வளர்ச்சி என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டில் முதல் 8 மாதங்களில், 18.9 பில்லியன் ரூபாய் ஈட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


கிழக்கு முனையம் மற்றும் ஜய கொள்கலன் முனையம் போன்றவற்றின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததன் மூலம் எதிர்காலத்தில் திறனை மேலும் அதிகரிப்பதற்கு நம்புவதாக இலங்கை துறைமுக ஆணைக்குழுத் தெரிவித்துள்ளது.