ஒக்டோபர் மாதத்தின் முதல் 6 நாட்களில் 34,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கூற்றுப்படி, ஒரு நாளைக்கு சராசரியாக 5,299 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் (2024) முதல் ஆறு நாட்களில் பதிவான 25,965 உடன் ஒப்பிடும்போது இது 14 சதவீதம் அதிகரிப்பாகும்.

அதன்படி இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.75 மில்லியனைத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை அதிக எண்ணிக்கையிலான வருகைகளைப் பதிவு செய்த நாடுகள் இந்தியா 386,030 (22%), இங்கிலாந்து 164,093 (9%) மற்றும் ரஷ்யா 123,414 (7%) ஆகும். மேலும், ஒக்டோபர் மாதத்தின் முதல் 6 நாட்களில், இந்தியாவில் இருந்து 10,738 (31.5%) சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 3,684 (10.8%) சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 2,200 (6.5%) சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 1,988 (5.8%) சுற்றுலாப் பயணிகளும், பங்களாதேஷிலிருந்து 1,577 (4.6%) சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர்.