BREAKING NEWS

உதவி செய்யாத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன் – மிரட்டிப் பார்க்கும் ட்ரம்ப்!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
உதவி செய்யாத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன் – மிரட்டிப் பார்க்கும் ட்ரம்ப்!

ஹார்முஸ் நீரிணையை “கண்காணிக்க”சுமார் ஏழு நாடுகளுடன் தனது நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்த பாதுகாப்புக் கூட்டணியில் இணைய விரும்பு கிறீர்களா? என்று சீனாவைக் கேட்டுள்ளதாக அவர் கூறினார்.

சீனா தனது எண்ணெய் தேவைகளுக்காக இந்த நீரிணையை அதிகம் நம்பியிருப்பதை அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

மற்ற நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட மறுத்த ட்ரம்ப், நேட்டோ மற்றும் பிற நாடுகள் “தங்கள் சொந்த எல்லையைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

இங்கு “எல்லை” என்பது அந்த நாடுகள் எரிசக்தி பெறும் வழிகளைக் குறிப்பதாக அவர் விளக்கினார்.

உதவி செய்ய முன்வராத நாடுகளை அமெரிக்கா “நிச்சயம் நினைவில் வைத்திருக்கும்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

சில நாடுகளிடம் கண்ணிவெடிகளை அகற்றும் கருவிகள் (Minesweepers) மற்றும் சில குறிப்பிட்ட வகை படகுகள் இருப்பதாகவும், அவை தங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தற்போது ஈரான் உடனான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், உலக எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறும் இந்த முக்கிய கடல் வழியைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் ட்ரம்ப் இறங்கியுள்ளார்.