BREAKING NEWS

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இலங்கையில் இருந்து எதிர்ப்பு!

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இலங்கையில் இருந்து எதிர்ப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில், இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களின் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

ரணில் விக்ரமசிங்க (முன்னாள் ஜனாதிபதி): அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆக்கிரமிப்புப் போக்குக்கு எதிராக இலங்கை வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குமார் குணரத்னம் (மாற்று கொள்கைகளுக்கான அமைப்பு): அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை ‘மிலேச்சத்தனமானவை’ என விமர்சித்துள்ள அவர், வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களை இலக்காகக் கொண்டே அமெரிக்கா இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி: அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ளதாகக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சி: அமெரிக்க ஜனாதிபதியின் இத்தகைய கீழ்த்தரமான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரம் அல்லது இயலுமை இல்லை என விமர்சித்துள்ளது.

சஜித் பிரேமதாச (எதிர்கட்சித் தலைவர்): மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த விசேட அறிக்கையை அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.