அவர் தமது சில உடைமைகளை அந்த வீட்டில் இருந்து தற்போது வெளியேற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதையடுத்து பல முன்னாள் ஜனாதிபதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் வெளியேறுவதற்கு கால அவகாசம் கோரியிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவருக்கு வழங்கப்பட்ட இல்லத்தில் இருந்து விரைவில் வெளியேறவுள்ளார்.
முன்னதாக, இரண்டு மாதங்களுக்குள் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி குறிப்பிட்டிருந்தார்.
அவர் கால அவகாசம் கோரியிருந்த இரண்டு மாத கால பகுதி நிறைவுக்கு வரவுள்ள நிலையில் தற்போது அதற்குரிய விடயங்களில் மும்முரம் காட்டி வருகிறார்.
முன்னதாக, 15 ஆண்டுகளுக்குள் இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சந்திரிக்கா, வயதான காலத்தில் வீட்டை விட்டு வெளியேறுவது கடினமாக இருந்ததால், அதே இடத்தில் தங்கக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.