தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், இதனையடுத்து தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் விசேட அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, தப்போவ நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை சினிமா