இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) பிற்பகல் 2.00 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 75 மி.மீ-க்கும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடற்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 15-25 கி.மீ ஆக இருக்கும்.