BREAKING NEWS

மின்னல் தாக்கம் குறித்து அவதானம்

PR
priya priya punidha in Latest Updates
Report
மின்னல் தாக்கம் குறித்து அவதானம்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, தெற்கு, ஊவா, வடமேல் மாகாணங்களுக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அவதானம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.