Month: October 2025

தோனியின் புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் தோனி அதிகாரபூர்வமாக ட்ரோன் விமானி உரிமம் பெற்றுள்ளார். ட்ரோன் விமானி உரிமத்தை அதிகாரபூர்வமாக பெற்றதாக சமூகவலைத்தள பக்கத்தில் தோனி அறிவித்துள்ளார். சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட…

12 வருடங்களின் பின்னர் மலையகத்தில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள ஹோட்டன் சமவெளி தேசியப் பூங்காவில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய அரிய மலர்களான நீலக்குறிஞ்சிப் பூக்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. 2,100 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், நீலம், ஊதா,…

வடக்கில் தனியார் கல்வி நிறுவனங்களை கண்காணிக்க விசேட ஏற்பாடுகள்

வடக்கிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக…

வடக்கில் லஞ்சீட்டுக்கு பதிலாக வாழை இலை

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் அதனை நிறைவேற்ற…

மலையகத்தில் தொடரும் சோகம் – குளவி கொட்டியதில் மூவர் வைத்தியசாலையில்

மஸ்கெலியா – டீசைட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கானதில் மூவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே இக் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பெண்ணொருவரும், ஆண் தொழிலாளர்கள் இருவரும் இதில் அடங்குகின்றனர். குறித்த மூவரும் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டுபேர்…

ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி விளையாடுகிறது. அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும்…

இந்தோனேசியா பாடசாலைக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஜாவா மாகாணத்தின் சிடோர்ஜா நகரத்தில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய பாடசாலையின் கட்டடம், கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி திடீரென இடிந்து…

பொலிஸாரை எதிர்த்து போராடும் வட மாகாண சட்டத்தரணிகள்

முறையான தேடுதல் உத்தரவு (Search Warrant) இன்றி, பெண் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அத்துமீறிச் செயற்பட்டதைக் கண்டித்து, வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப் புறக்கணிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாத்தில் இடம்பெற்ற…

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதில் கவனம் செலுத்தும் அரசாங்கம்

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் என்றும் இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரியவந்தது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி இன்று நாடாளுமன்ற அமர்வின்போது…

தங்கம் விலையில் உச்ச கட்ட ஏற்றம்:

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ.8,000 அதிகரித்துள்ளது. இன்று (07) காலை கொழும்பு செட்டியார் வீதியில் 22 கரட் தங்கம்…

இலங்கை சினிமா