Month: October 2025

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரிவில் புதிய மிதவைப்படகுச் சேவை ஆரம்பம்

திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதவைப்படகு சேவை இன்று (27) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தார். வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இயக்கப்படுகின்ற குறித்த படகுச் சேவையானது கடந்த 2021ஆம் நவம்பர்…

இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறை வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இந்த மாதத்தின் முதல் 26 நாட்களில் 137,876 சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 113,189 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும்போது…

2026ல் பாடசாலை நேரம் நீடிப்பு உறுதி

இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத்…

மத்தளவுக்கு இரு நாடுகளின் விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு, இரண்டு நாடுகள் விமான சேவைகளை ஆரம்பித்துள்ளதாக துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, பெலாரஸ் நாட்டுக்குச் சொந்தமான பெலாவியா ஏர்லைன்ஸ் (Belavia Airlines) மற்றும்…

இலங்கையின் வரி வருமானம் உயர்வு!

இலங்கையின் வரி வருமானம் இந்த ஆண்டின் (2025) மூன்றாம் காலாண்டு முடிவில், முந்தைய ஆண்டை விட 32.5 வீதமாக அதிகரித்துள்ளது. சுங்கத்துறை மூலம் இறக்குமதிக்கான மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்நாட்டு உற்பத்தி வரி மூலம் வரலாறு காணாத வரி வசூலே…

கடற்றொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி : உயர் தரத்திலான எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்

கடற்றொழிலாளர்களுக்கு, உயர் தரத்திலான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது. கடற்றொழிலாளர்கள் சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த…

சிறுவர்களுக்கு உடல் தண்டனையை தடை செய்வது குறித்து கவனம்

இலங்கையில் சிறுவர்களுக்கு உடல் மற்றும் உளவியல் தண்டனை வழங்குவதை நிறுத்துவதன் அவசியத்தை உறுதியாக நம்புவதாக இருப்பினும், ஒழுக்கத்தைப் பேணுவதற்குத் தண்டனைக்கு மாற்றான வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…

சுற்றுலா துறையை மேம்படுத்த திட்டம்

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 3,000 கோடி இலங்கை ரூபா) கடனுதவித் தொகுப்புக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை, நாட்டின் தேசிய சுற்றுலா கொள்கையுடன் இணைந்து, கொள்கை மறுசீரமைப்புகள் மற்றும்…

சிறுவர் துஸ்பிரயோகம் அதிகளவான முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 192 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த அதிகாரசபை…

மதுபானம்: புதிய வர்த்தமானி வெளியீடு!

மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துதல் மற்றும் கட்டணம் வசூலித்தல் தொடர்பான விதிகள் இதில் அடங்கும். குறித்த வர்த்தமானி அறிவிப்பானது ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.