Month: November 2025

“அதிரன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ‘அன்னமே..’

அன்ரன் டெலசெல்ப் வழங்கும் இயக்குனர் தினேஸ் கனகராஜ்ன் இயக்கத்தில், நாடளாவிய ரீதியில் திறமையானவர்களை ஒன்றிணைத்து உருவாக்கியதே “அதிரன்” அதிரன் படத்திற்கான முதல் பாடல் ‘அன்னமே …….’ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கானஇசையமைப்பாளர்- சகிஸ்ணா சேவியர் வரிகள் எழுதியவர்- வருண் துஸ்யந்தன் மற்றும் பாடியவர்கள்…

தேர்தல்கள் திணைக்களத்திற்கு புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் பதவியேற்பு

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார். அரச துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய…

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

நேற்று (12) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 326,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று (13) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை…

ஒன்லைனில் கடன் வாங்கிய யுவதி தற்கொலை.

கம்பஹா, வத்துபிட்டிவல தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு இளம் பெண் தாதி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ஹிமாயா செவ்வந்தி டி அல்விஸ் என்ற 23 வயதுடைய யுவதி என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. குறித்த யுவதி அத்தனகல்ல பகுதியை சேர்ந்த திருமணமாகாத…

தெருநாய்களினால் ஏற்படும் அபாயம் : 2 இலட்சிற்கு மேற்பட்ட மக்கள் பாதிப்பு

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அபாயகரமாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது. இதன்படி, தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த அபரிமிதமான அதிகரிப்பால், ஒவ்வொரு வருடமும் சுமார்…

சில நாட்களுக்கு மழையுடன் கூடிய வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

நாட்டின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…

வடக்கில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாகச் செயற்படும் இராணுவத்தினர் – பொலிஸார்

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள்கள் விற்பனை அதிகரிக்க இராணுவத்தினர்தான் பிரதான காரணம். பொலிஸாரும் அதற்கு உடந்தையாகச் செயற்படுகின்றார்கள் – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு –…

சீனாவில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதிர்ச்சி

சீனாவில் தென் மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் நிலச்சரிவு காரணமாக பகுதியளவு இடிந்து வீழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மாஎர்காங் (Maerkang) நகரில் அமைந்துள்ள 758 மீட்டர் நீளமுள்ள ஹோங்க்கி பாலமே…

பேருந்தில் இருந்து விழுந்த பெண் உடல் நசுங்கி பரிதாபமாக பலி

இரத்தினபுரி, கஹவத்தை பிரதேசத்தில் தனியார் பேருந்தில் இருந்து விழுந்து பேருந்தின் பின்புற சக்கரத்தில் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 பிள்ளைகளின் தாயான 68 வயதான கோனார முதியன்செலகே புஞ்சிமணிகே என்ற பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாகந்துரவிலிருந்து கஹவத்தை நோக்கிச் சென்ற…

டெல்லியை உலுக்கிய குண்டு வெடிப்பு! டி.என்.ஏ. பரிசோதனையில் வெளியான தகவல்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உமர் முகமது தான் என்று டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உமர் முகமது தாயிடம் எடுக்கப்பட்ட மாதிரியும் கார் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட காரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துபோயுள்ள நிலையில் குறித்த தகவல்…

இலங்கை சினிமா