Month: November 2025

நாவலப்பிட்டியில் மண்மேடு சரிந்ததில் மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பழைய பகையிரத முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மனைவி, மாமியார் மற்றும் மூன்று மாதக் குழந்தை என நாவலப்பிட்டி பொலிஸார்…

உயிர் காப்பு பணிகளுக்கு தொடர்புகொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உயிர் காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படைப் பிரிவின் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் விரைந்து குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை கடற்படைப் பிரிவு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாச : 071-8591868

கொழும்பை அண்மித்த மக்களை பாதுகாக்க ஏற்பாடு

கொழும்பை அண்மித்துள்ள சுமார் 3,000 மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான அவசர பேரிடர் மையம் ஆர். பிரேமதாச மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்ட அவசர அனர்த்த நிலைமைகளுக்கான துரித அழைப்பு இலக்கங்கள்

அபாய நிவாரண பெறுவதற்கான அழையுங்கள் அபாய மேலாண்மை மையம் (DMC): 117(அவசர அபாய அறிவிப்புகள் மற்றும் நிவாரண சேவைகள் ஒருங்கிணைப்பு) பொலிஸ் அவசர அழைப்பு: 119(உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்) 1990 சுவ சேவா Ambulance சேவை: 1990(நோயாளிகளை…

புலத்கொஹுபிட்டிய பகுதியில் மண்சரிவு : 12 பேர் மாயம்

கேகாலை – புலத்கொஹுபிட்டிய – தேதுகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 12 பேர் காணாமல் போயுள்ளனர். பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரம், கண்டி – ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன்,…

எச்சரிக்கை! ஒரு தசாப்தத்தில் கொழும்பு எதிர்கொள்ளும் மிக மோசமான வெள்ளப்பெருக்கு

களனி ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருவதால், இலங்கை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது 2016 ஆம் ஆண்டின் பேரழிவுகரமான வெள்ளத்தை விட மோசமான வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. நிலைமைகள் நீடித்தால், நாளை (29) இரவு…

மின் விநியோகம் துண்டிப்பு

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. குறிப்பாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.தற்போது நிலவும் காற்று மற்றும் பலத்த மழை காரணமாகவே…

வெள்ளத்தில் 70 பயணிகளுடன் சிக்கியுள்ள பேருந்து

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் 70 பயணிகளுடன் பேருந்து ஒன்று சிக்கியுள்ளது. இந்த பேருந்து சுமார் ஒன்றரை மணி நேரமாக அதே இடத்தில் நிற்பதாக இன்று (28) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.…

பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

சமகி ஜன பலவேகயவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது (Ismail Muthu Mohamed) அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில் அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே…

அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம்

மோசமான காலநிலை காரணமாக இன்று (நவம்பர் 28) காலை 6.00 மணிக்குப் பின்னர் அனைத்துப் பிரதான ரயில் மார்க்கங்களிலும் ரயில் சேவைகளை முற்றாக இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்…

இலங்கை சினிமா