Month: November 2025

வாழைச்சேனை தவிசாளரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.…

சேருவில பிரதேச சபையின் 2026ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

தேசிய மக்கள் சக்தியின் வசமுள்ள திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச சபை தவிசாளர் எம்.ஜி.துஷார சம்பத்தினால் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (24) திங்கட்கிழமை சபையில் சமர்பிக்கப்பட்ட நிலையில் 4 மேலதிக வாக்குகளால் இன்று…

ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் போராட்டம்!

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்று லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்ற போது, அவரது வருகையை கண்டித்து பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெம்ப்லி பகுதியில் உள்ள அல்பர்டன் உயர்தர பாடசாலையில்,…

மெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து

பாணந்துறையின் ஹிரான பகுதியில் உள்ள மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த மொரட்டுவ மாநகரசபைக்குச் சொந்தமான 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேர அஞ்சல் தொடருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் தொடருந்துகளின் சாரதிகள், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேர தொடருந்து போக்குவரத்தின் போது, காட்டு யானைகள் அடிக்கடி மோதுகின்றன. எனினும் அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு…

43000 பேருக்கு அஸ்வெசும பணம் இல்லை!

அஸ்வெசும’ (Aswesuma) நிவாரணத் திட்டத்திற்குத் தகுதி பெற்றிருந்தும், வங்கிக் கணக்கு இல்லாத ஒரே காரணத்தினால் 43,703 பயனாளிகள் கடந்த 2024ஆம் ஆண்டில் தமக்குரிய பணத்தைப் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நலன்புரி நன்மைகள் சபை தொடர்பான 2024ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையிலேயே…

குற்றக் குழு உறுப்பினர்கள் தொடர்பில் நீண்ட கால தடுப்புக் காவலுக்கு : புதிய சட்டமூலம் தயார்

தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்பத்திரங்களை சமர்பிக்கவும், நீண்ட காலம் தடுத்து வைப்பதற்குமான புதிய சட்டமூலத்தை சமர்பிக்க அரசாங்கம் தயாராகியுள்ளது. அதன்படி புதிய சட்டமூலத்தை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக…

தாய்ப்பாலில் யுரேனியத்தின் செறிவு : ஆய்வில் அதிர்ச்சி!

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் அபாயகரமான அளவில் யுரேனியம் இருப்பது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய ஊடகங்கள் இந்த விடயத்தை தெரிவிக்கின்றன. 40 தாய்மார்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அனைத்து மாதிரிகளிலும் யுரேனியம் கண்டறியப்பட்டுள்ளன.…

பசியால் வாடும் சூடான் மக்கள் : ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் பலி

சூடானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சூடான் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போரால் இந்த நிலை உருவாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையே நீண்ட கால மோதல்…

திருமண பந்தத்தில் இணையும் ஜீவன் தொண்டமான் : அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் திருப்பத்தூரில் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டின் திருப்பத்தூரை சேர்ந்த சீதா ஸ்ரீ நாச்சியார் என்பவரை ஜீவன் தொண்டமான் மணந்தார். குறித்த திருமண…

இலங்கை சினிமா