Month: January 2026

தூரம் போனவர்கள் மொட்டை நோக்கி படையெடுக்கின்றனர் – நாமல்

மகா சங்கத்தினரை அச்சுறுத்தி, அரசை கைப்பற்ற லால்காந்த நினைத்தால், அது ஒரு கனவுதான் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கூறினார். “ஒரு கட்சியாக, எங்கள் திட்டம் வழக்கம் போல் மிகவும் வெற்றிகரமாக முன்னேறி வருகிறது.…

நாடாளுமன்ற வன்முறை சம்பவம் குறித்த அறிக்கை எம்.பி.க்களுக்கு மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தில் நடந்த துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான விசாரணையின் முழு அறிக்கையும் இன்னும் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். சபை நடவடிக்கைகளின் தொடக்கத்தில் ஒரு கேள்வியை…

புதையல் தோண்டிய எழுவர் கைது

பதுளை மாவட்டத்தில் ரிதிமாலியத்த – பெத்தங்கஹாராவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் ரிதிமாலியத்த பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்…

கிளிகளை விற்பனை செய்ய முயன்ற இரு சந்தேக நபர்கள் கைது

காலி – ஊருகஸ்மன்ஹந்திய பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10 கிளிகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே…

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள் இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டன. சாமர…

ஜோன்ஸ்டன், மகன்கள் உள்ளிட்ட குழுவினருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் மற்றும் பிற சந்தேகநபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொறியை முறைக்கேடாக பயன்படுத்திய வழக்கு தொடர்பான விசாரணையின் போது வத்தளை…

உலகில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு உயர்வதாக ஆய்வில் தகவல்

உலகில் ஒருபுறம் பசியும் வறுமையும் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளதாக ஒக்ஸ்போம் சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 வீதம் உயர்ந்து, 18.3 டிரில்லியன்…

நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு சீனாவின் ஒத்துழைப்பு

சீன – இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று…

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு, வட- மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (23) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்…

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – மேலும் ஒருவர் கைது

ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடற்கரை வீதியின் 95 வத்தை பகுதியில் வைத்து நேற்று (22) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் கைதானவரிடம் இருந்து 24 கிராம்…