BREAKING NEWS

அதிகரித்துவரும் மார்பகப் புற்றுநோய் : பெண்களின் கவனத்திற்கு!

MI
Mithu Mithu in Latest Updates
Report
அதிகரித்துவரும் மார்பகப் புற்றுநோய் : பெண்களின் கவனத்திற்கு!
நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மூன்று பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், மார்பகப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மார்பக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறை மார்பக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.