இவ்விழா காலை 9.00 மணிக்கு ஹொலிரூட் தமிழ் வித்தியாலயத்திலும், நண்பகல் 12.00 மணிக்கு வெலிங்டன் தமிழ் வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளது.
2025ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களும், அதேபோல் க.பொ.த சா/த பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களும் இவ்விழாவில் பாராட்டப்படவுள்ளனர்.
இந்நிகழ்விற்கு அச்சு ஊடக அனுசரணையாக ‘விழித்திரை’ மாத இதழ் செயல்படுகிறது.
மேலும் அனுசரணையாக மலையக நற்பணி மன்றம் இணைந்து செயற்படுகிறது.