Author: admin

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவே அவர் இன்று வாக்குமூலம் வழங்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்

இந்திய ஒருநாள் அணியின் புதிய அணித்தலைவர்

இந்த ஒருநாள் தொடரின் அணித்தலைவராக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர்…

தலவாக்கலையில் விபத்து: மூவர் காயம்!

தலவாக்கலை நகரில் நேற்று (21) நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில்…

சாதனை நாயகன்.

2025 சாதனை நாயகனாக அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 ஆறு ஓட்டங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் அபிஷேக் சர்மா தனதாக்கியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை…

23,000 அரச ஊழியர்கள் குறித்து சஜித் வெளியிட்ட தகவல்*

அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதிகளை நம்பி அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மிஹிந்தலை தேர்தல் தொகுதியில் நேற்று…

சாவடி திரைப்படம் 26 ஆம் திகதி முதல் 14 திரையரங்குகளில்

சாவடி திரைப்படம் செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் 14 திரையரங்குகளிலும் வெளியிடப்படவுள்ளது. சாவடி திரைப்படமானது மட்டக்களப்பு வாழ் சினிமா ரசிகர்களுக்காக செப்டெம்பர் 28ம் திகதி மாலை 4. 45 மணிக்கு கல்லடி சாந்தி திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. இந்தத்…

ஆவணப்பட போட்டியில் முதல், இரண்டு இடத்தை பிடித்த மலையக இயக்குனர்கள்

மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தினால் நடத்தப்பட் அகில இலங்கை ரீதியிலான ஆவணப்பட போட்டியில் 500 திரைக்கதையில் இருந்து 40 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து சிறந்த ஆவணப்படங்கள் 5 தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் முதலாம் இடத்தை ஹட்டனை சேர்ந்த லிங்.சின்னா( லிங்க பிரகாசம் ஷாந்த…

தி மாதர் இன்று மட்டக்களப்பில்

நம் நாட்டுக் கலைஞர்கள் நடித்துள்ள பிரவீன் கிருஸ்ணராஜா இயக்கத்தில் உருவான ‘தி மாதர்‘ திரைப்படம் இன்று மாலை 05 மணிக்கு மட்டக்களப்பில் விநியோகஸ்தர் ஊடாக திரையிடப்படவுள்ளது. Windsor Production தயாரிப்பில், பிரவீன் கிருஸ்ணராஜா இயக்கியுள்ள இந்த திரைப்படமானது சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக…

சொத்து விபரங்களை டிஜிட்டல் வடிவத்தில் சமர்பிக்க கால அவகாசம் கோரும் சஜித்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளார். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் எதிர்க்கட்சி தலைவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் குறித்த…

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முறைப்பாடுகளை விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு

1985ஆம் ஆண்டு “வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை அதிகார சபை” என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுபவர்களின் முறைப்பாடுகளுக்கு பயனுள்ள மற்றும் உடனடி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுப்பது, முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை…