Author: biruntha biruntha

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்: 806 பேர் வெளியேற்றம்

வடகிழக்கு பருவமழையின் ஆரம்பம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 238 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 806 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மாவட்டமெங்கும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பாதிக்கப்பட்ட சமூகங்களை…

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

கடந்த வார இறுதி முதல் தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், இன்று (11) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,…

மதத் தலங்களை சுத்திகரிக்க கொடுப்பனவு

அனர்த்தத்தினால் சேதமடைந்த விகாரைகள் மற்றும் மதத் தலங்களை சுத்திகரிப்பு செய்வதற்காக கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பதுளை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி…

டிட்வா சூறாவளியால் இருதய நோய்கள் அதிகரிப்பு

டிட்வா சூறாவளியின் தாக்கம், தனிநபரின் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்களை 40 சதவீதமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனைச் சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக, இருதய நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் கோத்தபாய ரணசிங்க தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த…

இன்று முதல் வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடையும்

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடையக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்…

மிருகக்காட்சி சாலையில் பறவைகளை திருடியவர் கைது

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 வெளிநாட்டு பறவை இனங்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை குற்றப்பிரிவு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர் தெஹிவளை, நெதிமாலவைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தங்கத்தின் விலையில் மாற்றம்

இன்றைய தங்கவிலை நிலவரம் வெளியாகியுள்ளது. கடந்த 06 ஆம் திகதி விற்பனை செய்யப்பட்ட அதே விலையிலே இன்றும்(08) தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.…

அரச அறிவிப்புகள் மும்மொழிகளில்-அதிரடி அறிவிப்பு

அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய, அதிதீவிர வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களின்…

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 தனிநபர்கள் 956 பாதுகாப்பான…

சேதமடைந்த விவசாய நிலங்களை மீட்டெடுக்க நடவடிக்கை

தித்வா சூறாவளியின் தாக்கத்தால் சேதமடைந்த விவசாய வயல் நிலங்களை மீட்டெடுத்தல் தொடர்பாக புவிசரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது . இந்த அறிக்கையில் பாதிப்படைந்துள்ள வயல் நிலங்களை மீட்டெடுத்து மீண்டும் விவசாயத்தை ஆரம்பிப்பது தொடர்பிலும், வெள்ளநீர் வலிந்தோடியதால் வயல்களில் நிரம்பியிருக்கும்…

இலங்கை சினிமா