Author: biruntha biruntha

வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் இந்த கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேகநபர் மஹரகம நாவின்ன பகுதியில் கைது செய்யப்பட்டதாக…

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – கொழும்பில் பலத்த பாதுகாப்பு

வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் நபரை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் வெலிகம பிரதேச சபை தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய துப்பாக்கிதாரியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொழும்பு கோட்டை பகுதியில் நபர்…

சீரற்ற காலநிலை – 29,414 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். இதேவேளை, 11…

வெலிகந்த பகுதியில் வேன் விபத்து – ஒருவர் பலி

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிகந்த கட்டுவன்வில வீதியில் அத்துகல பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று இரவு, கட்டுவன்வில நோக்கிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி, கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.இதன்போது காயமடைந்த வேனின்…

பிரதேச சபை தலைவர் கொலை தொடர்பில் மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு…

வெள்ள அபாய எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்தில், புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஜரட்ட குயின் தொடருந்தில் தீ விபத்து

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்த நோக்கி இயங்கும் ரஜரட்ட குயின் தொடருந்து, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அனுராதபுரத்தின் தஹையகம பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.15 மணிக்கு அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் தொடருந்து இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர், தலைமன்னாரிலிருந்து…

3000 பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்

அரசாங்கத்தின் திட்டமற்ற வாகன இறக்குமதியால் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். திட்டமிடப்படாத வாகன…

பொலிஸ் துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்

பொலிஸ் துப்பாக்கி சூடு இளைஞர் படுகாயம் யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி…

குளவிக் கொட்டுக்குள்ளான தோட்ட தொழிலாளர்கள்

பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக் கொட்டுக்கு இலக்கான 04 பெண் தொழிலாளர்களும், ஆண் ஒருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.