Author: biruntha biruntha

இலங்கைக்கு உதவிகரம் நீட்டிய மியன்மார்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிய மியன்மாரின் வானூர்தி ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. மியன்மார் வான்படைக்குச் சொந்தமான Y-8 வானூர்தியே நிவாரணப் பொருட்களுடன் கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை வான்படை தளத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்…

முதியோர் இல்லத்தில் இருந்த 11 பேர் பலி

குருணாகல் – பன்னல, நலவலானவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 25 பேரில் 11 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூண்டுலோயா பகுதியில் பாரிய மண்சரிவு

நுவரெலியாவின் பூண்டுலோயா பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.குறித்த பகுதியின் மீட்புப் பணிக்காக, இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் எதுவித தகவலும் வெளியாகவில்லை.

மின் விநியோகம் துண்டிப்பு

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. குறிப்பாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.தற்போது நிலவும் காற்று மற்றும் பலத்த மழை காரணமாகவே…

வெள்ளத்தில் 70 பயணிகளுடன் சிக்கியுள்ள பேருந்து

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் 70 பயணிகளுடன் பேருந்து ஒன்று சிக்கியுள்ளது. இந்த பேருந்து சுமார் ஒன்றரை மணி நேரமாக அதே இடத்தில் நிற்பதாக இன்று (28) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.…

பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது இராஜினாமா

சமகி ஜன பலவேகயவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது (Ismail Muthu Mohamed) அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில் அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே…

அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம்

மோசமான காலநிலை காரணமாக இன்று (நவம்பர் 28) காலை 6.00 மணிக்குப் பின்னர் அனைத்துப் பிரதான ரயில் மார்க்கங்களிலும் ரயில் சேவைகளை முற்றாக இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்…

களனி கங்கையை அண்மித்து வசிப்போருக்கு எச்சரிக்கை

களனி கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எஹலியகொட, நோர்வூட், யட்டியந்தோட்டை, கலிகமுவ, ருவான்வெல்ல, புலத்கொஹூபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவாக்கை, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, கடுவெல, பியகம, கொழும்பு உட்பட பகுதிகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய…

அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவினை இழப்பீடாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை…

சீரற்ற வானிலை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் மார்க்கத்தில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் வெல்லவ பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் பயணம் தடைப்பட்டுள்ளது. அத்துடன் புத்தளம் ரயில்…

இலங்கை சினிமா