Author: biruntha biruntha

முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயந்த வர்ணவீர தமது 64 வது வயதில் இன்று (16) காலமானார். 1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜயனந்த வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும்…

மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிட்டு வழங்க திட்டம்

தற்போது 300,000 க்கும் மேற்பட்ட சாரதி உரிமங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், அடுத்த 3 மாதங்களுக்குள் அவற்றை அச்சிட்டு வழங்க எதிர்பார்க்கிறோம் என்றும் அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில்…

சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலில் இந்தியா பின்னடைவு

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. சமீபத்தில் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 பட்டியலில் இந்தியா 85வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 80வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை ஐந்து இடங்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்க…

பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த இடமாற்றம் செய்யப்பட்டமை அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை நிமித்தமாகவே என பொலிஸ் தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் தெரிவிப்பவர்களுக்கு வழங்க வேண்டிய 5 மில்லியன்…

தீபாவளிக்கு மறுதினம் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சபரகமுவ…

இலங்கை மண்ணில் கால் பதித்தார் இஷாரா செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வீரசிங்க பினிபுர தேவகே இஷாரா செவ்வந்தி, ஜீவதாசன் கனகராசா, தக்ஷி நந்தகுமார, தினேஷ் ஷ்யாமந்த, டி சில்வா கலுதார,…

இலங்கையில் அரசியல்வாதிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் -சர்வதேச ஊடகம் குற்றச்சாட்டு

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்திருந்தாலும், இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகச் சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன்…

சம்பள உயர்வு திட்டத்தில் பொருளாதார தர்க்கம் இல்லை:பெருந்தோட்ட நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டுக்குள் குறைந்தபட்ச தினசரி சம்பளம் ரூ. 1,750 வழங்கப்படும் என்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவிப்புக்கு, பெருந்தோட்ட நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. தற்போதுள்ள 1,350 ரூபாய் நாளாந்த அடிப்படை சம்பளத்துடன், மேலும் 350 ரூபாய்…

மரக்கறி விலைகள் வீழ்ச்சி: நுவரெலியா விவசாயிகள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விலைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் கடுமையான நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, கேரட், லீக்ஸ், கோவா போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்றுக்கு 70 முதல் 90 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகின்றன. இதனால்,…

IMF தாயேவாக மாறியது ஸ்ரீலங்கா தாயே: சஜித் விமர்சனம்

இலங்கையில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்குத் தேவையான உரம் கிடைக்காத காரணத்தால், நாட்டின் தேயிலை உற்பத்தித் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மத்துகமவின் அகலவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த…