Category: அரசியல்

 மாணவிகளுக்கு இலவச சுகாதார துவாய்கள் உயர் நீதிமன்றம் உத்தரவு

பாடசாலைகளில் கல்வி கற்கும் ஏழை மாணவிகள் சுகாதார துவாய்கள் வாங்க முடியாத சூழலால் கல்வியை கைவிடுவதைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி…

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு -ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தொழிலாளர்கள்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் பெருந்தோட்ட அமைச்சு பிராந்திய தோட்ட நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளது இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மேலும் ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர் தொழிலாளர்கள். 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்…

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் புதுப்பித்துக்கொள்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு

2026 ஆம் ஆண்டிற்காக துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்கொள்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்காக தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்…

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (31) மாவட்ட செயலக பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சருமான அருண்ஹேமச்சந்திர தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தை…

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு பாராட்டு விழாக்களை நடத்தும் வழக்கம் பற்றி ஜோசப் ஸ்டாலின்

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு அவர்களுக்கே பாராட்டு விழாக்களை நடத்தும் வழக்கம் கடந்த ஆட்சி காலத்தில் தாராளமாக இடம்பெற்றது. ஆனால் தற்போதைய அரசாங்கத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து…

சர்ச்சைக்குரிய கல்வித் தொகுதி தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களிடம் வாக்குமூலம்

சர்ச்சைக்குரிய கல்வித் தொகுதி தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று, அது தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க நேற்று (30) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார். விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்த போதே…

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கைத் தூதரகம் கோரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. எந்தவொரு ஆபத்தான நிலைமையையும் எதிர்கொள்வதற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தயாராக உள்ளன.…

அரசியலமைப்பு சபை இன்று ஜனாதிபதியின் பரிந்துரை பரிசீலிக்கப்படும் கொறடா பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்

அரசியலமைப்பு சபை இன்று (31) புதிதாக நியமிக்கப்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகளுடனான இரண்டாவது கூட்டத்திற்காக கூடும் போது, ​​கணக்காய்வாளர் நாயகத்திற்கான ஜனாதிபதியின் பரிந்துரை பரிசீலிக்கப்படும் என்று அரசாங்கத்தின் தலைமை கொறடா பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில்…

பிள்ளைகள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து எரங்க வீரரத்ன

பிள்ளைகள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். சிறுவர் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உள ஆரோக்கியம், சைபர் பாதுகாப்பு, சட்டம் மற்றும்…

15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு

15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து,…

இலங்கை சினிமா