Category: உள்ளூர் செய்திகள்

மரக்கறிகளின் புதிய விலை பட்டியல் அறிமுகமானது

கொழும்பு புறக்கோட்டை பொருளாதார நிலையத்தில் கிழங்கு மற்றும் வெங்காயம் என்பவற்றின் மொத்த விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு கிலோகிராம் நுவரெலியா உருளைக்கிழங்கு 220 முதல் 240 ரூபாய் வரையிலும், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 170 முதல் 180 ரூபாய் வரையிலும் விற்பனை…

பாடசாலை நேரம் நீடிப்பு தொடர்பில் அதிருப்தி – அதிபர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது. கொழும்பில் இன்று (24) செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தொழிற்சங்க…

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இந்த வாரத்தில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறது. அதன்படி இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை ரூ. 5000 குறைந்துள்ளது. அந்தவகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ…

கடற்றொழிலாளர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்

இன்று பிற்பகல் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…

மக்களுக்கு அனர்த்த அபாய எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (24) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

களுவாஞ்சிக்குடி யில் பஸ் நடத்துனர் மீது தாக்குதல்

களுவாஞ்சிக்குடியில் இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ் வண்டியை வழிமறித்து நடத்துனரையும் பயணி ஒருவரையும் தாக்கியுள்ளனர். இதனால் பஸ்ஸில் பயணித்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு பாதிக்கப்பட்ட பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

முஸ்லிம் தாதியர்கள் தமது கலாச்சாரத்தை பேணும் வகையில் உடை

முஸ்லிம் சிவில் அமைப்பினருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் தாதியர்கள் தமது கலாச்சாரம் மற்றும் மத மரபுகளைப் பேணும் வகையில் உடைகளை அணிவதில் எதிர்நோக்கும் சவால்கள், கொவிட்-19 காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட…

இலங்கையருக்கு அரிய வாய்ப்பு : வானில் இன்று “Lemmon” வால் நட்சத்திரம்

‘C/2025 A6’ என்ற வால் நட்சத்திரத்தை, இன்று(24) மாலை இலங்கையர்கள் காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த வால் நட்சத்திரம் ‘Lemmon’ (லெமன்) என்றும் அழைக்கப்படும். சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், மாலை 6.30 மணி…

டயகம மருத்துவமனையில் குழப்பம்

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் மருத்துவமனை ஊழியர்களை அச்சுறுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து நுவரெலிய – டயகம பிராந்திய மருத்துவமனையின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ ஊழியர்கள் உட்பட்டவர்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை என்று கூறியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக,…

அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய அமைப்புகள்

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்து அண்மையில் வெளியாகிய வர்த்தமானிக்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. குறித்த வர்த்தமானி அறிவிப்பு நடுத்தர அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு பாரிய சாவால்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாய அமைப்புகளும் ஆலை உரிமையாளர்களும் அரசாங்கத்தின் குறித்த…