Category: முக்கிய செய்திகள்

2004 டிசம்பர் 26: இலங்கை ஒருபோதும் மறக்காத ஒரு நாள்.

2004-ம் ஆண்டு இதே நாளில், இந்தியப் பெருங்கடல் சுனாமி நமது தேசத்தை என்றென்றும் மாற்றியமைத்தபோது இலங்கை ஸ்தம்பித்து நின்றது. சில நிமிடங்களிலேயே, ஆயிரக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயின, குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டன, ஒட்டுமொத்த சமூகங்களும் சுவடு தெரியாமல் அழிந்து போயின. ஒரு காலத்தில்…

அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை!

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் : மூடப்பட்ட கடுகன்னாவ – மாவனெல்லை இடையான வீதி

கண்டி வீதியிலுள்ள கீழ் கடுகன்னாவ மற்றும் மாவனெல்லை ஆகியவற்றுக்கு இடையேயான வீதி மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

கடுகண்ணாவ அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கடுகண்ணாவ அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தது. மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. ஏலவே இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர்…

இரண்டும் கெட்டான் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. நாங்கள் கட்டாயமாக பேரணியில் பங்கேற்கப் போவதில்லை. கட்சி என்ற ரீதியல் அதுதொடர்பில் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள்…

தங்காலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு

தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. தங்காலை – உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 68 வயதுடைய நபர் ஒருவரும், 59 வயதுடைய அவரது…

கட்டார் ஏர்வெய்ஸில் குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த கதி.. தாய் எடுத்த அதிரடி தீர்மானம்!

ஒரு விமானப் பணிப்பெண் தனது எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, தனது இளம் மகளுக்கு பால் கலந்த சொக்கலேட் கொடுத்ததற்காக, வட கரோலினாவைச் சேர்ந்த தாய் ஒருவர் கட்டார் ஏர்வெய்ஸ் மீது 5 மில்லியன் டொலர் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். 33 வயதான ஸ்வேதா…

மலையக பிரதிநிதிகளின் ஆதரவுடன் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. இதேவேளை பாதீட்டு வாக்கெடுப்பில் 8 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. அதன்படி பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு…

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தமிழ் பிரதிநிதிகளின் நிலைப்பாடு!

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப் பெற்ற அதேவேளை 8 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின்…

ஒன்லைனில் கடன் வாங்கிய யுவதி தற்கொலை.

கம்பஹா, வத்துபிட்டிவல தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு இளம் பெண் தாதி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ஹிமாயா செவ்வந்தி டி அல்விஸ் என்ற 23 வயதுடைய யுவதி என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. குறித்த யுவதி அத்தனகல்ல பகுதியை சேர்ந்த திருமணமாகாத…

இலங்கை சினிமா