கர்ப்ப காலத்தில் கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்,அவர்களது மூன்று வயதை அடையும்போது, நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக புதிய ஆராய்ச்சி ஒன்று எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் மாஸ் ஜெனரல் பிரிகாம் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், கர்ப்ப காலத்தில் கொவிட் தொற்று ஏற்பட்டால், குழந்தைகளுக்குப் பேச்சுத் தாமதம், ஓட்டிசம் (Autism) மற்றும் உடல் அசைவுக் கோளாறுகள் (Motor Disorders) ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்ற குழந்தைகளை விட 29 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோயெதிர்ப்புச் செயல்பாடு, கருவின் மூளை வளர்ச்சியைக் சீர்குலைப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும், கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் தொற்று ஏற்பட்டால் அதிக ஆபத்து இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எனவே, கர்ப்பிணிப் பெண்கள் கொவிட்-19 தொற்று ஏற்படாமல் தடுப்பது மிகவும் முக்கியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது
02 Nov 2025 | 10:30 AM
12 views
கர்ப்பினிப் பெண்களுக்கு கொவிட்- 19 தொற்று ஏற்பட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து : அதிர்ச்சி தகவல்!
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
இலங்கைக்கு நேரே உச்சி வெயில்: இன்று முதல் 15 ஆம் திகதி வரை அவதானம்!
05 Apr 2026 · 6:46 AM