ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறை வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இந்த மாதத்தின் முதல் 26 நாட்களில் 137,876 சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 113,189 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும்போது 21.8 சதவீத அதிகரிப்பாகும்.
அதன்படி இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,863,370 ஆகும்.
ஜனவரி 01 முதல் அக்டோபர் 26 ஆம் திகதி வரை, இந்தியாவிலிருந்து மொத்தம் 416,387 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இங்கிலாந்திலிருந்து 172,926 சுற்றுலாப் பயணிகள், ரஷ்யாவிலிருந்து 130,651 சுற்றுலாப் பயணிகள், ஜெர்மனியிலிருந்து 114,944 சுற்றுலாப் பயணிகள் மற்றும் சீனாவிலிருந்து 111,189 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
28 Oct 2025 | 2:58 PM
11 views
இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் அதிகரிப்பு
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!
04 Apr 2026 · 10:30 AM
உள்ளூர் செய்திகள்
“விண்ணப்பக் காலம் முடிந்தது!” – மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு.
04 Apr 2026 · 9:34 AM