கொழும்பு – மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 31 இளைஞர் மற்றும் யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிம்புலாவல, கமதா என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள் குழுவொன்றே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த இசை நிகழ்ச்சியில், 500ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மிரிஹான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 31 இளைஞர், யுவதிகளிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.