புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் இன்றைய தினம் (09) இரவு 7:30 மணியளவில் இளைஞனுடன் வாகனம் ஒன்று மோதி பாரியளவு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விபதல் பலத்த காயமடைந்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற வாகன உரிமையாளர் மற்றும் வாகனம் நகரவாசிகளால் பிடிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்