BREAKING NEWS

நுவரெலியா அஞ்சல் நிலையத்திற்குஆபத்து

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
நுவரெலியா அஞ்சல் நிலையத்திற்குஆபத்து

வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்து மழையில் நனைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அஞ்சல் நிலையத்திற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இருப்பினும், நுவரெலியா அஞ்சல் நிலைய கட்டடத்தில் உள்ள குறைபாடுகளை புனரமைக்க அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க அஞ்சல் நிலைய கட்டடம் மற்றும் அரசாங்கம் கட்டடத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யத் தவறியதால், குறித்த கட்டடம் பழுதடைந்து வருவதாக நுவரெலியாவைப் பாதுகாக்கும் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கவனத்தை ஈர்த்துள்ள நுவரெலியா பிங்க் அஞ்சல் நிலைய கட்டடத்தின் கூரை மற்றும் பிற குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு மேலும் கோரியுள்ளது.