இதுவரை ரூபா 25 மில்லியனுக்கும் (சுமார் 2.5 கோடி) அதிகமான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் 2024 ஏப்ரல் 1 முதல் செப்டெம்பர் 30 வரை நடத்திய 306 சுற்றிவளைப்புகளின் மூலம் எடுக்கப்பட்டன.
இதில் பெரும்பாலான சோதனைகள் கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன.
சமீபத்திய ஒரு சம்பவத்தில், கொழும்பை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு, ஒரு போத்தல் குடிநீரை ரூ.20 அதிக விலைக்கு விற்பனை செய்ததற்காக ரூ.600,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நுகர்வோர் விவகார அதிகார சபை, எதிர்காலத்திலும் இதுபோன்ற விலைக் கட்டுப்பாட்டு மீறல்களுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபடுத்தியுள்ளது.