உலகிற்கு அமைதி, கருணை மற்றும் மனத்தூய்மை ஆகிய செய்திகளைப் பரப்பும் நோக்கில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து ‘அமைதிக்கான நடைப்பயண’ (Walk for Peace) துறவிகள் குழு இலங்கைக்கான தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
பிரா பொன்சாய் காம்யேம் (Phra Ponchai Khamyeam) தலைமையிலான இந்தத் தூதுக்குழு, டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டது.
புத்தரின் போதனைகள் செறிந்த இலங்கை மண்ணில், ஆன்மீக ஒற்றுமையையும் உலகளாவிய நல்லிணக்கத்தையும் தொடர்ந்து முன்னெடுப்பதே இவர்களின் பிரதான நோக்கமாகும்.
இத்துறவிகளின் வருகை இலங்கை மக்களிடையே நற்பண்புகளை வளர்ப்பதோடு, சமூகங்களுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தி, ஒவ்வொருவர் மனதிலும் அமைதியை விதைக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“அனைத்து உயிர்களுக்கும் ஆசியும், நன்மையும் கிடைக்கட்டும்” எனப் பயணத்தைத் தொடங்கும் போது இக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.